மாநகரப் பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலரின் தண்டனை விவரம் !
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சைதாப்பேட்டை பேருந்துநிலையம் எதிரே இன்று காலை சாலையில் சென்ற ஒரு நபர் கீழே எச்சில் துப்பியுள்ளார். அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் தன்னை நோக்கி ஏன் எச்சில் துப்பினாய் எனக் கூறி அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் அந்த நபரின் முகம் கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது.
பொதுமக்கள் காயம் பட்ட நபரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் காயமடைந்த நபர் அரசு பேருந்து நடத்துனர் பாலசந்திரன் என்றும், சைதாப் பேட்டை காவலர் லூயிஸ் என்பதும் தெரியவந்தது.
இரண்டு பேரிடமும் சைதாப் பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்து நடத்துநர் பாலசசந்திரனை காவலர் லூயிஸ் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவலர் லூயிசை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி துணை ஆணையர் மகேந்திரன் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உதவிஆணையர் தலைமையிலான போலீசார் மேற்கொள்ள உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் கிடைத்துள்ளது.
செய்தியாளர் பா. கணேசன்.