• முகப்பு
  • chennai
  • சென்னையில் 312 இடங்களில் போக்கு வரத்து போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையில் 312 இடங்களில் போக்கு வரத்து போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இரு சக்கர வாகனத்தில் பின்னாலமர்ந்து வருபவர்களுக்கும் தலைக் கவசம் அவசியம் என உத்தரவிடப் பட்டுள்ளது. சென்னையில் 312 இடங்களில் போக்கு வரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டுள்ளனர்.பெருநகர போக்கு வரத்து காவல்த்துறையினர், சென்னையில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களை குறைக்கவும். போக்கு வரத்து விதிகளை அனைவரும் கடை பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதுத்தொடர்பாக, சென்னைப்பெருநகர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்புவாகன சோதனையும் நடத்தி, விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்கு வரத்து விதிகளை கடைப் பிடிப்பதை மேம்படுத்து வதற்காகவும், ஹெல்மெட்லணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்துவருபவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந் நிலையில், 01. 01. 2022 முதல் 15. 05. 2022 வரையிலான காலக்கட்டத்தில், சென்னையில் விபத்து குறித்த ஆய்வு ஒன்று நடத்திய போது, இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்ததாகவும், 841 பேர் காயம் அடைந்து உள்ளனர். இதில், தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதில் 80 பேரும், பின்னால் அமர்ந்திருந்த 18 பேர்கள் உயிரிழந்தது மட்டும் அல்லாமல், வாகனம் ஓட்டிய 714 பேரும், வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்த 27 பேரும் காயம் அடைந்திருப்பதாக போக்கு வரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விபத்துக்களைக்கட்டுப் படுத்தி, குறைக்கவும். 23. 05. 2022 திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகர காவல் துறை இருசக்கர வாகனஓட்டிகள் மற்றும் பின்னாலமர்ந்து வருபவர்களும், நிச்சயம் போக்கு வரத்து விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்புவாகன சோதனைநடத்த திட்டமிடப் பட்டது. அதன் படி சென்னையில் 312 இடங்களில் போக்கு வரத்துபோலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஹெல்மெட் அணியாதவாகன ஓட்டுபவர்கள் மீதும், அமர்ந்து வருபவர்கள் மீது, மோட்டார் வாகன சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்கு வரத்து விதிகளை கடைபிடித்து, விலை மதிப்பற்றமனித உயிர்களை காக்கவும், விபத்தில்லாநகரை அடையவும் சென்னை காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளனர். குண்டும் குழியும் இல்லாத தரமான சாலைகளை போட சொல்லி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended