திருச்சியில் குதிரை பந்திய தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை.

JK 

UPDATED: May 26, 2023, 6:37:12 PM

திருச்சி உறையூர் வண்டிக்காரத்தெரு சேர்ந்தவர் சண்முகம் என்கிற கொப்பறை. 

குதிரை வளர்த்துக் வந்தார். மேலும், பல்வேறு இடங்களில் நடைபெறும் குதிரை பந்தியத்தில் கலந்து கொள்வார். இதன் காரணமாக இவருக்கும் சில நபர்களுக்கும் குதிரை பந்தியத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் அருகே இன்று நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 3பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

தகவல் அறிந்த உறையூர் காவல்துறையினர் சம்பவ இடததுக்கு விரைவில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

வாலிபர் ஒருவர் பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் உறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended