ஸ்ரீமுஷ்ணத்தில் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளி கல்லூரிகள் ஒன்றிணைந்து தூய்மைக்கான மக்கள் இயக்கம் இன்று நடைபெற்றது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்ச்சி பேரணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் தலைமையில் மற்றும் பிபிபிஜே கல்வி நிலையம் பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பள்ளி மாணவ , மாணவிகள் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் பொது இடங்களில் குப்பை கொட்டுதல் தவிர்த்தல்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பதற்கான ஒவ்வொரு கடைக்கும் சென்று பேரூராட்சி மன்ற தலைவி செல்வி ஆனந்தன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விருப்பு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் நடைபெற்றது.
இதில் மாணவ மாணவிகள் குப்பைகளை தரம்பிரித்து கொடுப்போம் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்ப்போம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தவிர்ப்போம் என கோஷம் எழுப்பினர்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.