• முகப்பு
  • ஆன்மீகம்
  • வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு.

வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு.

செ.சீனிவாசன்

UPDATED: May 30, 2023, 8:27:18 PM

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது.

புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி , தேர்பவணி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.

இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிதழ்ச்சி மாதாகுளத்தில் நடைபெற்றது.

இதில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

பின்னர் திருப்பலி மேடையிலிருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு அருகே உள்ள தேரில் மாதாவின் சொரூபத்திற்கு தஞ்சை மறைமாவட்ட  பரிபாலகர்சகாயராஜ்  கிரீடத்தை வைத்து முடி சூட்டினார்.

அதை தொடர்ந்து தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன திரளான கிருஷ்துவர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended