• முகப்பு
  • ஆன்மீகம்
  • பாபநாசம் படைவெட்டி மாரியம்மன் ஆலய திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது 

பாபநாசம் படைவெட்டி மாரியம்மன் ஆலய திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது 

ஆர்.தீனதயாளன்

UPDATED: May 11, 2023, 4:56:06 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் உள்ள அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் ஆலய ஒன்பதாம் ஆண்டு திருவிழா வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளதால் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

முன்னதாக ஆலயம் முன்பு சிவாச்சாரியார் மந்திரங்களுடன் யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மகாதீபார்த்தனை காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

VIDEOS

RELATED NEWS

Recommended