• முகப்பு
  • கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தனது காரில் அமர்ந்தபடி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட ரைஸ்மில் உரிமையாளர்.

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தனது காரில் அமர்ந்தபடி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட ரைஸ்மில் உரிமையாளர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் ஜெயராமன் என்பவர் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தனது காரில் அமர்ந்தபடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கார் நிற்பதால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கார் அருகே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Kallakurichi News,Latest Kallakurichi news,Todays Kallakurichi News,District news

VIDEOS

RELATED NEWS

Recommended