ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறப்பு

முத்தையா

UPDATED: May 23, 2023, 6:06:51 PM

தமிழகத்தில் வரும் ஜூன் 1- ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.                

இந்த நிலையில் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு உள்ளதா ? என்பது குறித்து ஆய்வு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

பள்ளிகளின் வாகனங்களாக குவிந்து இருந்த அந்த மைதானத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். எஸ். உமா திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒவ்வொரு வாகனங்களிலும் முதலுதவி பெட்டி, தீ அணைப்பான் உள்ளதா? , ஓட்டுநர்கள் அனைவரும் லைசன்ஸ் பெற்றுள்ளார்களா ? ,

பேருந்தில் படிக்கட்டின் அளவு, அவசர கால வழி அமைக்கப்பட்டு உள்ளதா?, சிசிடிவி கேமரா உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளி வேன் ஓட்டுநரிடம் முதலுதவி பெட்டியில் இருக்கிறதா? மருந்துகள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பயன்படுத்துவது, தீ அனைப்பான் கருவியை எவ்வாறு இயக்குவது என கேட்டறிந்தார்.

அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமினையும் ஆட்சியர் டாக்டர் உமா பார்வையிட்டார்.

இந்த ஆய்வில் நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட 46 பள்ளிகளிலிருந்து 567 பள்ளி வேன், பேருந்துகள் வந்திருந்தன.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended