• முகப்பு
  • district
  • திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் இரு சக்கர வாகனத்தில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ( VIDEO )

திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் இரு சக்கர வாகனத்தில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ( VIDEO )

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தபோது வாகனத்தில் ஏதோ சத்தம் உள்ளது என்று சந்தேகத்துடன் வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதில் பாம்பு உள்ளது என்று தெரியவந்தது. உடனே திருவிடைமருதூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் பாம்பு உள்ளே இருந்தது தெரியவந்தது. ஒரு மணி நேரம் போராடி இருசக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended