• முகப்பு
  • ஆட்சி தொடருமா என்கிற சந்தேகம் என்னை உட்பட அனைவருக்கும் இருந்தது அமைச்சர் !

ஆட்சி தொடருமா என்கிற சந்தேகம் என்னை உட்பட அனைவருக்கும் இருந்தது அமைச்சர் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அதிமுக ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி தொடருமா என்கிற சந்தேகம் என்னை உட்பட அனைவருக்கும் இருந்தது. இருப்பினும் உண்டாக்கப்பட்ட சின்னத்தை மீட்டு இரட்டை இலை சின்னத்தை பெற்று வெற்றிகரமாக 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடத்தியது. எதிர்க்கட்சியாக இருக்க கூடிய இந்த காலத்தில் எப்போது பிரச்சனைகள் வரும் அதில் உள்ளே புகுந்து மீன் பிடிக்கலாம் குட்டையை குழப்பலாம் என்று காத்துக்கொண்டு இருக்கக் கூடிய எதிரிகள் துரோகிகளுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது,கட்சியில் உள்ள அனைவருக்குமே பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் பொறுப்பு என்பது ஒருவர் மட்டுமே வரக்கூடியது எனவே பிரச்சினைகள் இல்லாமல் உட்கட்சி தேர்தலை சுமூகமாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய நகர பேரூராட்சி கழக பொறுப்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் நடைபெற்று முடிவு இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,ஆன்மீகம்,aanmeegam,anmigam,anmeegam,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,admk,minister

VIDEOS

RELATED NEWS

Recommended