Author: THE GREAT INDIA NEWS

Category: aanmegam

இந்தியா : பல பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்திய நாட்டின் மெய்யியல் கோட்பாடுகள் உச்சம் தொட்டுவிட்டது. மேலை நாட்டு அணு அறிவியல் வளர்நிலையில், தமிழ்நாட்டின் திருமூலர் அணுவின் அளவை அளந்தே சொல்லிவிட்டார், "மேவிய சீவன் வடிவது சொல்லிடில், கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரமானால் ஆவியின் கூறு நூரயிரத்தொன்றே." தமிழ்நாட்டு மெய்யியல் சிறந்தோரை நாம் சித்தர் என்றழைக்கிறோம். குரு பூஜைகளோடு நம் மனம் நிறைவு பெற்றுவிடுகிறது. "முப்பாழும் தாண்டி வந்து அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் ஆடுவார் தாளம் போடுவார் அன்பர் கூடுவார் இசை பாடுவார் இதைக் கண்டாரும் கிடையாது விண்டாரும் சொன்னதில்லை அகிலாண்ட கோடியெல்லாம் ஒன்றாய்ச் சமைந்திருக்கும் அல்லவோ" இந்தப் பிரபஞ்சமும் அதைச் சூழ்ந்தும் இருப்பது இறைநிலை. கரும்பொருள். Dark matter. இதை பெரிய கருப்பன் என்று சொன்னார்கள். நாம் வாழும் பகுதியை சின்னக் கருப்பன் என்று சொன்னார்கள். எந்த ஆலயத் திருவிழாக்களிலும் கருப்பர் முன்னே செல்ல அனைத்தும் பின் தொடரும். காசியில் கருப்பர் அனுமதி பெற வேண்டும். சபரிமலையில் கருப்பர் உண்டு. தேரடியில் கருப்பர் உண்டு. "பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே" கிருஷ்ணம் என்றால் கருமை, கிருஷ் என்பது பிறவித் தொடர், ண என்பது மாயப் பிறப்பறுப்பது. காலம் என்ற சொல்லோடு ன் என்ற விகுதி கூட காலனாவது மொழியின் செழுமை மற்றும் அன்று. உண்மையின் விளக்கமும் அதுவே. Pattern precision regularity என்பது இறையின் குணநிலை. வியாபித்துக் கிடப்பது. தனியார்மயமாகத் தொடங்கி உலகமயமாகத் தாராளமயமாவது தான் இறைநிலை. நாம் இன்னமும் நம் நாட்டுத் தத்துவங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிவிற்கு ஒவ்வாதது என ஒதுக்கப்பட்டுவிட்டது என்பது யதார்த்தம். அறிவோம்,தெளிவோம்,உயர்வோம். anmigam,aanmigam,aanmregam special article,spiritual,devotional,anmigam news

Tags:

Comments & Conversations - 0