சங்கத் தலைமை பகுதி நேர ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பகுதி நேர ஆசிரியர்களுக்கான சங்கத் தலைமையின் அறிக்கை.
கடந்த முறை நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தின் இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி
ஊதிய உயர்வும், கல்வியாண்டில் அனைத்து வேலை நாட்களும் முழுநேர பணி, எஸ் ஆர் ஓபன் செய்தல் , பிஎப் பிடித்தம் செய்தல், இஎஸ் ஐ பிடித்தம் செய்தல் மற்றும் பணியிட மாறுதல் ஓய்வு வயது 58 இருந்து 60 ஆவது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என அதை விரைவில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம் என மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்
மற்ற முழு விவரங்களை நாளை பதிவிடுகிறேன் என்று கு. சேசுராஜா
மாநிலத் தலைவர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் அவர்கள் கூறினார்கள்.
செய்தியாளர்
பா. கணேசன்
(அனுபவஸ்தன்)