ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கோவை - மேட்டுப்பாளையம் இடையே முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 23 ஆம் தேதி முதல் இயக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது. கோவை - மேட்டுப்பாளையம் இடையே ஏற்கெனவே இரண்டு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. மூன்றாவதாக கோவை - மேட்டுப்பாளையம் இடையே முன் பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06816), வரும் 23 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். கோவை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப் படும் இந்த ரயில், மாலை 4.30மணிக்கு மேட்டுப் பாளையம் சென்றடையும். இதே போல, மேட்டுப் பாளையம் - கோவை இடையிலான முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06813) வரும் 23 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப் படும். இந்த ரயில், மேட்டுப் பாளை யத்தில் இருந்து காலை 10.55 மணிக்குபுறப்பட்டு, காலை 11.40 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள், கோவைவடக்கு, துடியலூர், பெரிய நாயக்கன் பாளையம், காரமடை ரயில் நிலையங்களில் தலா ஒருநிமிடம் நின்றுசெல்லும். கோவை - மேட்டுப் பாளையம் இடையே எந்த ரயில் நிலையத்தில் ஏறி இறங்கினாலும், இந்த ரயிலில் குறைந்த பட்ச கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்படும். எனவே, இந்த வழித்தடத்தில் தினமும் பயணிப்போர் ரூபாய் 185 செலுத்தி மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றுக் கொண்டு, கோவை - மேட்டுப் பாளையம் இடையே பயணிக்கலாம். இது தவிர, 3 மாதங்களுக்கும் சேர்த்து ரூபாய் 500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் பெற விண்ணப்பதுடன் ஒரு புகைப் படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதுமானது. அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன்டிக்கெட் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். செய்தியாளர்: பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended