• முகப்பு
  • district
  • மணிமங்கலம் அருகே கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி புளிய மரத்தில் மோதி பயங்கரம் ,டிரைவருக்கு என்ன ஆச்சு ?

மணிமங்கலம் அருகே கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி புளிய மரத்தில் மோதி பயங்கரம் ,டிரைவருக்கு என்ன ஆச்சு ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆந்திர மாநிலத்திலிருந்து மேடவாக்கம் பகுதிக்கு கிரானைட் கல் ஏற்றிக்கொண்டு பாரத் பென்ஸ் டெய்லர் லாரி மணிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் வினோத் குமார் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரைலர் லாரி வேகமாக புளியமரத்தில் மோதியதில் லாரியின் முன் பாகம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கி பின்புறம் உள்ள கிரானைட் கற்கள் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கிப் போயின. ஓட்டுனர் வினோத் குமார் கால்கள் இரண்டும் அப்பளம் போல் நொறுங்கி பானட் பகுதிக்குள் மாட்டிக் கொண்டதால் என்ன செய்வதென்று அறியாது துடித்துக் கொண்டிருந்தார். இதனை அறிந்த மணிமங்கலம் காவல்துறையினர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஜேசிபி உதவியுடன் வினோத் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended