Author: THE GREAT INDIA NEWS

Category: crime

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் தடம் எண் 583A MTC பேருந்தில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள ஆயகொளத்தூர் தொடுகாடு செங்காடு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இன்று அதேபோல் பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை ஓட்டுனர் மேலே ஏறுமாறு கண்டித்துள்ளனர் இதற்காக ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் இருவரையும் ஆயகொளத்தூர் கிராமத்தில் பேருந்து நின்றபோது பள்ளி மாணவர்கள் சரமாரியாக அடித்து விட்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதில் அருகில் இருந்தவர்கள் மீட்டு இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஓட்டுநர் ஸ்ரீதர் வ/44 என்பவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடத்துனர் அமிர்தலிங்கம் வ/48 புறநோயாளியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய சம்பவம் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம்,இன்றைய முக்கிய செய்திகள் காஞ்சிபுரம்,இன்றைய செய்திகள் காஞ்சிபுரம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,Kanchipuram news,Kanchipuram news today tamil,Sriperambadur today news tamil,government school students attacked a government bus driver and conductor has caused a stir

Tags:

Comments & Conversations - 0