Author: THE GREAT INDIA NEWS

Category: crime

சென்னை காசிமேடு பகுதியைசேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தமகளுக்கு 15 வயதும், 2 வதுமகளுக்கு 13 வயதும், 3 ஆவது மகளுக்கு 11 வயதும் ஆகிறது. இவர்களின் தாய் சென்னையில் உள்ளதனியார் மருத்துவ மனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் 2 ஆவது மகளான 13 வயதுசிறுமி அப் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்புபடித்து வருகிறார். அவருடன் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்குசென்று படிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த நிலையில் 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து,  மாணவியை கட்டிப் போட்டு 4 பேரும்சேர்ந்து மாணவியின் ஆடைகளை கழற்றி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்தமாணவி கூச்சல் போட்டதை அடுத்து,  4 பேரும்வீட்டில் இருந்து வெளியேறினார்கள் தனக்குநேர்ந்த இந்த பாலியல் கொடுமையால் அதிர்ந்து போன மாணவி இதுபற்றி தனது தங்கையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இந்தவிஷயம் தாய்க்கு தெரியவந்துள்ளது. இதனால்கடும் அதிர்ச்சி அடைந்ததாய் இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அவர்போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினார். இது தொடர்பாக மாணவியின் தாய் ராயபுரம்மகளிர் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்சென்னை #இன்றையசெய்திகள்சென்னை #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #chennainewstodaytamil #chennaiflashnewstamil #pocso #pocsoact #rapist #rape
Comments & Conversations - 0