• முகப்பு
  • குடவாசல் அருகே அதிமுக பிரமுகர் குறித்து அவதூறு பரப்பிய பெரும்பண்ணையூர் ஊராட்சி மன்ற தலைவரி

குடவாசல் அருகே அதிமுக பிரமுகர் குறித்து அவதூறு பரப்பிய பெரும்பண்ணையூர் ஊராட்சி மன்ற தலைவரி

Vijaya lalshmi

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

குடவாசல் அருகே அதிமுக பிரமுகர் குறித்து அவதூறு பரப்பிய பெரும்பண்ணையூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆர் நடராஜனுக்கு போலீஸ் வலைவீச்சு திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாப்பா சுப்ரமணியன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடிய வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், குடவாசல் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும்,தற்போதைய மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான பாப்பா சுப்பிரமணியன், தன் மீது பெரும்பண்ணையூர் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவரும் பெரும்பண்ணையூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான நடராஜன் என்பவர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும், இருவேறு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் விதத்திலும் பல வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறு செய்தி பரப்பியதாக கூறி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில். போலீசார் கோவில்பத்து நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்வதற்கு காவல்துறை தேடி வரும் நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended