இரும்பு கிரில் கேட்டில் சிக்கிய குழந்தையின் தலை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் அருகே தாராசுரம் கடைவீதியில் வாடகை குடியிருப்பில் வசிக்கும் விஜய் ஆனந்தின் ஒன்றரை வயது ஆண் குழந்தை அரிபிரியன்.
இன்று காலை தனது வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கிரில் கேட்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, திடீரென இரும்பு கிரில் கேட்டில் தலை சிக்கி கொண்டது.
இதனைத் தொடர்ந்து தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை அழத் தொடங்கியது .
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியது.
இரும்பு கிரில் கேட் ல் உள்ள கம்பியை அறுத்து குழந்தையை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போதுசெய்தியாளர் ஒருவர் சாமார்த்தியமாக இரும்பு கிரில் கம்பியை பலவந்தமாக இழுத்து வளைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதுஇதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது