Author: ராஜ்குமார்

Category: தமிழ்நாடு

தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஓட்டல், பேக்கிரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொது மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பலவேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது உணவு தொடயான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலி Tn food safety Consumer App பதிவிறக்கம் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுநாப்புதுறை அலுவலர்கள் கூறும்போது, “தரமற்ற உணவு, கலப்படம்: உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இதற்கான இணையதளம் மூலமும், கைபேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம்.

மேலும் புகார்தாரரின் விபரங்கள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:

#thenkasinews , #thenkasinewstodaylive, #thenkasinewstodayinenglish #foodsafety #food #foodsafetydepartment #thenkasinewsintamil #thenkasinewstoday #thenkasinewsintamiltoday #thenkasitodaynewsintamil #surandainews #surandaitodaynews #TnfoodsafetyConsumerApp
Comments & Conversations - 0