சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்தவர் கனகராஜ் ( 27), இவர் கடந்த 2018ல் சுத்துக்கேணி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டருகே ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். காட்டேரிக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்ஐ முருகானந்தம் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட கனகராஜை கைது செய்து இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நிதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.
இவ்வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கனகராஜுக்கு போக்சோ வழக்கு (பிரிவு6-ன் கீழ் பாலியல் பலாத்காரம்) 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் அரசு இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு சிறப்பு வழக்கறிஞராக பாலமுருகன் இவ்வழக்கில் ஆஜரானார்.
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.