துப்பாக்கியுடன் வீட்டில் புகுந்த கும்பல் வீட்டின் உரிமையாளரை கட்டி போட்டு 20 பவுன் சங்கிலி கொள்ளை.
முகேஷ்
UPDATED: May 27, 2023, 6:57:03 AM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி அருகே உறவினர் வீட்டுக்கு வந்து செல்வது போல பர்தா அணிந்த 4 ஆண்கள் ஒரு பெண் உட்பட ஐந்து கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த உமர் பாபு(53) என்பவரை கயிரால் கட்டி வைத்து 20 பவுன் தங்க நகைகளை பறிக்கும் போது திருடன் என கூச்சலிட்டதால் துப்பாக்கி, அரிவாள், டார்ச் லைட் ஆகியவற்றை போட்டு விட்டு கொள்ளையடித்த நகைகளை கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
சம்பவம் அறிந்த கோட்டார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் - அதே பகுதியில் சந்தேகம் படியாக சுற்றி திரிந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.