- முகப்பு
- மாவட்டச் செய்தி
- செங்கோட்டை நூலகத்தில் நான் முதல்வன் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
செங்கோட்டை நூலகத்தில் நான் முதல்வன் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
ராஜ்குமார்
UPDATED: May 29, 2023, 2:53:05 PM
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் செங்கோட்டை நூலகத்தில் வைத்து தொடங்கப் பட்டது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ரம்யா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
வராண்டா ரேஸ் அகடமி ஆசிரியர் சதாசிவம் பயிற்சி திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
விழாவில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், விழுதுகள் சேகர் ,வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக குற்றாலம் பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற எல்.என் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நூலகர் ராமசாமி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள் செய்திருந்தார்கள்.