Author: செ.சீனிவாசன்

Category: ஆன்மீகம்

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தில் பிரசித்தி பெற்ற  மாழையொண்கண்ணி அம்பிகை, சமேத மனத்துணைநாதர் சுவாமி அருள்மிகு இருதய கமலநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு கும்பாபிஷேகம் மற்றும் சித்திரை திருவிழா தேர் தெப்பத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது,

அதனை முன்னிட்டு சுமார் 20 அடி நீளமும் 20 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 120 ‌மிதவைகள் கொண்டு தெப்பம்  கட்டமைக்கப்பட்டது.

தொடர்ந்து சோமஸ்கந்தர் மற்றும் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில்
ஆலயத்தை சுற்றி வலம் வந்து பின்னர் தெப்பத்தில் எழுந்தருளினார்.  

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நாதஸ்வரம்,  மேள தாளங்கள் முழங்க  கோயிலைச் சுற்றி மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட திருக்குளத்தில் தெப்ப உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில்  சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக தெப்பத்தில் தீயணைப்பு  மீட்பு பணிகள் துறையினர்  மற்றும் வலிவலம் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:

#nagainews , #nagainewsintamil , #nagapattinamnewslive , #nagainewstoday , #nagapattinamnewstodaytamil , #nagapattinamnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #nagapattinamtodaynews , #nagailatestnews , #Nagapattinamnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0