• முகப்பு
  • crime
  • தனதுமனைவி மற்றும் இருபிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தை , தானும் தற்கொலை.

தனதுமனைவி மற்றும் இருபிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தை , தானும் தற்கொலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் இப்படி கொடூரமாக இறந்ததன்பின்னணி குறித்து காவல்த்துறையினர் விசாரித்துவருகின்றனர். பல்லாவரம் பகுதியைசேர்ந்த தனியார்நிறுவன ஊழியர் பிரகாஷ்(வயது41). இவரது மனைவி காயத்திரி(வயது39). இத்தம்பதிக்கு, நித்யஸ்ரீ(வயது13) என்ற மகளும், ஹரி கிருஷ்ணன்வயது(8) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வீட்டுக்கு இன்று காலைசென்ற பிரகாஷின்தந்தை, வீட்டில் அனைவரும் இறந்துகிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல்தெரிவித்து உள்ளார். அதன்பேரில் சங்கர்நகர் போலீசார் நிகழ்விடத்திற்குச்சென்று விசாரித்து உள்ளனர். முதற் கட்டமாக சம்பவ இடத்திலிருந்த கை ரேகையை பதிவுசெய்து, கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப் பட்டு அவர்கள் வீட்டுனுள் சோதனைகள் செய்யப் பட்டிருக்கிறது. அப்போது இறப்பதற்கு முன் கடிதமொன்றை அக்குடும்பத்தினர் எழுதி வைத்து உள்ளது காவல்த்துறையினருக்கும் தெரியவந்து உள்ளது. அக்கடிதத்தில், `எங்களின் இந்தமுடிவு, குடும்பத்தோடு சேர்ந்தெடுத்த முடிவு’ என குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பிரகாஷ் வீட்டில் சுமார் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பிலான கடன்பத்திரம் கிடைத்திருப்பதாகவும், அதனால் கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு விவரம் விசாரணைக்கு பிறகே தெரியுமென தெரிவித்துள்ளனர் காவலர்கள். தந்தை பிரகாஷ்தான் மற்ற மூவரையும் கொலை செய்து, பின்னர் அவரும் தற்கொலை செய்துள்ளார் என காவல்துறையினருக்கு தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல்ஆணையர் ரவி, கடந்த 19-ம் தேதி பிரகாஷ் ஆன்லைனில் மின் ரம்பம் ஆர்டர் போட்டு வாங்கி இருப்பது தெரியவந்திருப்பதாகவும் கூறியுள்ளார். தற்கொலை கடிதத்தை வீட்டின் சுவற்றில் ஒட்டிவிட்டு தற்கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended