• முகப்பு
  • குற்றம்
  • பவானிசாகர் அருகே மகளிடம் பேசி பழகி வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை.

பவானிசாகர் அருகே மகளிடம் பேசி பழகி வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 14, 2023, 7:01:17 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் 37 இவர் விவசாயக் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் பெயர் (மணிமேகலை) மாற்றம் செய்யப்பட்டது. 

இவருக்கும் கோடேபாளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் படையப்பன் (எ) யுவராஜ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்த நிலையில் குமார் பலமுறை தனது மகளிடம் பழகி வந்த யுவராஜை கண்டித்து உள்ளார்.

இந் நிலையில் யுவராஜ் நேற்று இரவு குமாரின் மகளிடம் பேசிக்கொண்டு இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த குமார்  மறைத்து வைத்திருந்த அரிவாளால் யுவராஜ் என்பவரை தலை ,கை ஆகிய பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் யுவராஜ் மயங்கி கீழே விழுந்தார்.உடனே அப்பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர் யுவராஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended