மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு நேர்ந்த கதி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மன வளர்ச்சி குன்றிய 1 ஆம்வகுப்பு சிறுமிக்கு சூடு வைத்த ஆசிரியை... சென்னையில் பரபரப்பு.
சென்னை வியாசர் பாடியில் மன வளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து ஆசிரியை சூடு வைத்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வியாசர் பாடி பகுதியில் வசித்துவருபவர் திவ்யா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணவரைஇழந்த அவருக்கு 10 வயதில்மகனும், 6 வயதில் மன வளர்ச்சிகுன்றிய மாற்றுத் திறனாளி மகளும் உள்ளனர்.
கடந்த 4 ம் தேதிதான், பெரம்பூரில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான தனியார்ப்பள்ளியில் மகளை திவ்யா சேர்த்து உள்ளார்.
தொடர்ந்து சிறுமியின்தாத்தா கலைச் செல்வன், காலை 9.30 மணிக்கு சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் மதியம் 12.30 மணிக்கு வீட்டுக்குஅழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்த வகையில் வழக்கம் போல் , நேற்றுமதியம் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்செல்வதற்காக கலைச் செல்வன் பள்ளிக்குச்சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆசிரியைகவிதா , சிறுமியின் கை மற்றும் கால்களில் காயம் இருப்பதாக காட்டியுள்ளார். மேலும் இவ்வளவு காயங்களுடன் சிறுமியை பள்ளிக்கு ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் அவர்கேள்வி எழுப்பியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கலைச் செல்வன் காலையில் வீட்டிலிருந்து வந்த போது சிறுமி நலமுடன் இருந்ததாகவும், அவருக்கு எந்த காயங்களும் இல்லை கூறியிருக்கிறார்.
மேலும், இந்தகாயங்கள் பள்ளியில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியையிடம் கலைச் செல்வன் வாக்கு வாதத்தில் ஈடு பட்டதாக தெரிகிறது.
பின்னர் சிறுமியை பரிசோதித்த போது அவரது வலதுகணுக் கால், இடதுகணுக்கால் மற்றும் வலதுமணிக் கட்டில் சூடு வைக்கப் பட்ட தீக்காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையறிந்த சிறுமியின்தாய் திவ்யா பள்ளிக்குவந்து ஆசிரியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஆத்திரத்தில் வகுப்பறையில் இருந்த கண்ணாடி ஜன்னல்களையும் அவர் தலையால்முட்டி உடைத்திருக்கிறார். இதனால் அங்குசற்று பர பரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் சிறுமியை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுமியின்தாய் திவ்யா அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்
பா. கணேசன்.