கருவறுக்கிறது கருமுட்டை விவகாரம். மருத்துவ மனைகள் நிரந்தரமாக மூடல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிறுமியின் கரு முட்டைவிவகாரம்:
சுதா மருத்துவ மனை மூடப் படுகிறது.
மருத்துவ விதி முறைகளை மீறி செயல் பட்ட ஈரோடு, சேலம் சுதா மருத்துவ மனை, ஓசூர் விஜய் மருத்துவ மனை மற்றும் பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவ மனைகளை நிரந்தரமாகமூட நடவடிக்கை எடுக்க இணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட நான்கு மருத்துவமனைகளும் பதினைந்து நாள்களில் அனைத்து நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்யவேண்டும்.
உடனடி நடவடிக்கையாக, நான்கு மருத்துவமனைகளின் ஸ்கேன்செண்டர்களும் மூடப்படும்.
முதலமைச்சரின் காப்பீட்டுகளுக்கான உரிமைகள் ரத்துசெய்யப்படும்.
வெளிமாநிலங்களில் முறை கேட்டில் ஈடுபட்ட மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துறைசெயலாளர் மூலம் சம்பந்தப் பட்ட மாநில அரசுகளுக்கு பரிந்துரை அளிக்கப் பட்டு உள்ளது .
செய்தியாளர்
பா. கணேசன்