குளத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர் இறந்து மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் அருகே அண்ணலகிரகரம் ஊராட்சி அருகிலுள்ள மாத்தி கேட்டு தரும குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு அப்பகுதி சேர்ந்தவர்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்த பட்டீஸ்வரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் , இவர் இதே பகுதியில் உள்ள அண்ணலகிரகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் தங்கமணி வயது 62 என்பது தெரியவந்தது .
இவர் சில்வர் பட்டறையில் 30 ஆண்டுகளாக பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார்,
இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இவர் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இவர் கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை இவரைப் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை தரும குளத்தில் சடலமாகக் கிடந்த வரை தங்கமணியின் மகன் சரவணன் அடையாளம் கண்டு , தனது தந்தை என்று காவல் துறையிடம் தெரிவித்ததன் பேரில், பிரேதத்தை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.