• முகப்பு
  • குற்றம்
  • ஓட்டுனர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் நெல்லையை சேர்ந்த ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓட்டுனர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் நெல்லையை சேர்ந்த ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குமரி ஒற்றன்

UPDATED: May 15, 2023, 2:59:41 PM

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனை பிரச்சித்தி பெற்ற சுற்றுலா மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களில் ஒன்றாக குமரி மாவட்டத்தில் திகழ்ந்து வருகிறது.

இங்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது உண்டு.

இந்நிலையில் 15.5.2023 நெல்லை மாவட்டத்தை சார்ந்த ஒரு குழுவினர் இந்த அரண்மனையை சுற்றி பார்க்க வந்துள்ளனர்.

வந்த இடத்தில் கார்பார்க்கிங்  செய்யும் பகுதியில் ஓட்டுனர்களுக்கடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் இரு ஓட்டுநர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி உள்ளனர்.

இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகராஜ சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் காவல்துறையினர் சந்தேக வழக்காக பதிவு செய்தனர்.

இந்த சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கேட்டு உடலை வாங்காமல், உயிரிழந்த ஓட்டுனரின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்திற்கு திரளாக வந்து கோரிக்கை வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது..

VIDEOS

RELATED NEWS

Recommended