- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மகளிர் கல்லூரி பேருந்து மீது ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி ஆம்னி ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்.
மகளிர் கல்லூரி பேருந்து மீது ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி ஆம்னி ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்.
முத்தையா
UPDATED: May 9, 2023, 7:57:56 PM
நாமக்கல் மாவட்டம் பரமத்தி திருச்செங்கோடு சாலையில் இரும்பு பாலம் அருகில் உள்ள வசந்தபுரம் என்ற இடத்தில் இன்று மாலை 5 மணி அளவில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இருந்து சென்ற கல்லூரி பஸ் மீது பரமத்தி வேலூர் சென்று வந்த வசந்தபுரத்தை சேர்ந்த ஆம்னி ஓட்டுநர் பூபதி ஓட்டி வந்த ஆம்னி வேனில் நேருக்கு நேர் மோதி விபத்து உருவாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆம்னி ஓட்டுநர் பூபதி இறந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்த அவருடைய உறவினர்கள் மற்ற பொதுமக்கள் ஓடி வந்து ஆம்னி வேனில் இருந்து பூபதியை வெளியேற்ற முயற்சி செய்து அவரை வெளிய எடுக்கும் போது அவர் இறந்திருந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது
மகளிர் கல்லூரி பேருந்தில் ஏராளமான கல்லூரி மாணவிகள் அமர்ந்திருந்த நிலையில் அந்த கல்லூரி பேருந்து ஆனது கரூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்ததும் தெரியவருகிறது.
அந்த கல்லூரி பேருந்தில் இருந்த மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.