தேனி மாவட்டம் 30 - வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் , தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆரம்ப பள்ளி , மல்லிகை மஹால் மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சி , அலுவலகம் சக்கம்பட்டி சமுதாயக் கொண்டமநாயக்கன்பட்டி சமுதாயக் கூடம் ஆகிய பகுதிகளில் இன்று ( 12.06.2022 ) பொதுசுகாதாரத்துறையின் மூலம் 30 - வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளீதரன் இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது.
தமிழக அரசின் பன்முக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளாலும் , பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் , தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .
தற்போது , இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் உயர்ந்து கொண்டு வந்தாலும் , தமிழ்நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாகவே உயர்ந்துள்ளது , இதன் தாக்கத்தைக் குறைத்திட தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
அதன்படி , கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திட கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு , கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநிலம் முழுவதும் துரிதப்படுத்தி , பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் , இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 30 - வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது .
அதன்படி , ஆண்டிபட்டி வட்டாரத்தில் 83 இடங்களிலும் , போடிநாயக்கனூர் வட்டாரத்தில் 110 இடங்களிலும் , சின்னமனூர் வட்டாரத்தில் 60 இடங்களிலும் , கம்பம் வட்டாரத்தில் 89 இடங்களிலும் , க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் 60 இடங்களிலும் , பெரியகுளம் வட்டாரத்தில் 136 இடங்களிலும் , தேனி வட்டாரத்தில் 84 இடங்களிலும் , உத்தமபாளையம் வட்டாரத்தில் 51 இடங்களிலும் என மொத்தம் மாவட்டத்தில் 673 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு , 1,07,520 கோவிஷீல்டு , கோவாக்சின் , காபேவேக்ஸ் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு .
தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது . -2 கொரோனா தடுப்பூசி குறைவாக குறைவாக செலுத்திக் கொண்டுள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை கணக்கெடுத்து அந்தப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வீடு வீடாகச்சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களைக் கண்டறிந்து அவர்களை அருகில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்திடும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது .
கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் பொதுமக்கள் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ , மாணவ , மாணவியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு , தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்திட வேண்டும் .
எனவே , கொரோனா நோய்த்தொற்றினை கருத்தில் கொண்டு பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் , தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும் என் தெரிவித்தார் .
இந்த ஆய்வின் போது , ஆண்டிபட்டி வட்டாட்சியர் திருமுருகன் , தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் அ.வீரமுத்துக்குமார் , ஆண்டிபட்டி பேரூராட்சித்தலைவர் பொன் . சந்திரகலா , பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமிபாண்டியன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர் .
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் , தேனி .
தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா.