• முகப்பு
  • district
  • கணவன் உயிரிழந்த செய்தி கேட்டவுடன் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் உயிரிழந்த செய்தி கேட்டவுடன் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே ஆடுதுறை கஞ்சா மேட்டு தெருவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தமிழாசிரியர் புலவர் பழனி வேலன் (75) இவருக்கு திருமணமயாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார் இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகளும் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக காலை மாலை நேரங்களில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சக்கரை நோயால் அவதிப்பட்டு கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த செய்தி தெரிந்தவுடன் மனைவியும் உயிரிழந்தார் , இந்த சம்பவத்தால் ஆடுதுறை பகுதியில் பெருந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended