• முகப்பு
  • ஆன்மீகம்
  • பொன்னேரி திருஆயர்பாடி பகுதியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை பிரமோற்சவ விழா.

பொன்னேரி திருஆயர்பாடி பகுதியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை பிரமோற்சவ விழா.

L.குமார்

UPDATED: May 10, 2023, 9:46:00 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றின் கரையில் உள்ள பொன்னேரி திருஆயர்பாடி பகுதியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கருடோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக கரி கிருஷ்ண பெருமாளும், அகத்தீஷ்வரரும் நேருக்கு நேர் சந்திக்கும் வைபவம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சித்திரை தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது "கோவிந்தா" "கோவிந்தா"என பக்தி பரவசத்தோடு பக்தர்கள் சாமி ரிசனம் செய்தனர். பொன்னேரியின் முக்கிய வீதிகளில் தேரானது வலம் வந்து கொண்டிருக்கிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended