• முகப்பு
  • அரசியல்
  • பவானிசாகர் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் அவர்களுக்கு வெண்கல திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா காணொளி வாயிலாக தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்

பவானிசாகர் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் அவர்களுக்கு வெண்கல திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா காணொளி வாயிலாக தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 10, 2023, 10:06:22 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி நினைவகங்கள் துறை மற்றும் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை சார்பில்,

2 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2 ஏக்கர் பரப்பளவில் உத்தமத் தியாகி ஐயா எம் ஏ ஈஸ்வரன் அவர்களுக்கு வெண்கலத்தில் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட செயலாளர் நல்ல சிவம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி , பூமி பூஜை நடைபெற்றது.

இதில் இரண்டு அடுக்கு அரங்கக் கட்டிடம் ,வரவேற்பு அறை, காட்சிக்கூடம், அலுவலக அறை, மற்றும் சேமிப்பு கிடங்கு என அனைத்து வசதிகளுடன் இந்த இரண்டு அடுக்கு கட்டிடம் அமைய உள்ளது.

இதில் பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் மாலதி உதவி பொறியாளர் பழனிச்சாமி மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended