Author: JK 

Category: மாவட்டச் செய்தி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாகக் கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலக வளாக கட்டடத்தினை பார்வையிட்டார். 

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சங்கரஜோதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

#trichynewstoday , #trichynewstamil , #trichynewspapertoday , #trichynewslivetoday , #trichynews , #இன்றையசெய்திகள்திருச்சி , #இன்றையசெய்திகள்திருச்சிதமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் , #indrayaseithigaltrichy , #todaynewstrichy , #todaynewstamilnadu , #todaytamilnadunews , #indrayaseithigaltrichytamilnadu , #indrayaseithigaltamilnadumavattangal , #TheGreatIndiaNews , #Tginews , #news , #மணப்பாறை , #manapparailatestnews , #manapparaitodaynews , #manapparainews
Comments & Conversations - 0