Author: THE GREAT INDIA NEWS

Category: district

தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி சாம்பல் ஏற்றிய லாரி ஒன்று கடலூர் மாவட்டம் பென்னாடத்திற்கு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டி என்ற இடத்தில் வரும்போது லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் பாபுராஜ் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி கவர் பிளாக் கல் ஏற்றி சென்ற சரக்கு வேன் நின்றுகொண்டிருந்த லாரியில் பின்புறம் எதிர்பாராதவகையில் மோதியது. இதில் வேனின் முன்பக்கம் நசுங்கிதால் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனங்கபிரதான் (வயது 29), லோடுமேன்கள் ஜெய்போத்தா (வயது 34), சனந்தாபோய் (வயது 27) ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை நீண்டநேரம் போராடி மீட்டனர். இதில் வேன் ஓட்டுநர் அனங்கபிரதான், லோடுமேன் ஜெய்போத்தா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த சனந்தபோய் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வளநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.

Tags:

#இன்றையசெய்திகள்திருச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kallakurichitodaynews #kallakurichilatestnews #kallakurichinews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle #manapparai #manapparinews #manapparaitodaynews #manapparailatestnews #manapparai
Comments & Conversations - 0