- முகப்பு
- தனித்துணை ஆட்சியர் சென்ற கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தனித்துணை ஆட்சியர் மற்று?
தனித்துணை ஆட்சியர் சென்ற கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தனித்துணை ஆட்சியர் மற்று?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் பிரிவு சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி தனது காரில் சென்றுள்ளார் அப்போது சங்கராபுரம் தாலுக்கா அலுவலகம் பிரிவு சாலையில் காரின் முன்பக்க டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமாக இருந்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமி கோபிகா பலத்த காயங்களுடன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.இந்த சாலைவிபத்தில் 6 பேர் படுகாயங்களுடன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.
#accident #கள்ளக்குறிச்சி #திட்டதனித்துணைஆட்சியர் #ஆட்சியர் #அரசுமருத்துவமனை #todaytamilnews #latesttamilnews #breakingtamilnews #tamilnews #kallakurichi #news #tginews #thegreatindianews