உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் காரில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஊட்டி பகுதியைச் சேர்ந்த இல்தாக் என்பவர் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு சொந்த ஊரான ஊட்டிக்கு சொகுசு காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளி அருகே வந்தபோது காரில் இருந்த முன் பகுதியில் திடீரென புகை முட்டத்துடன் தீ பற்றி எரிந்தது உடனே அவர்கள் அவசர அவசரமாக காரில் இருந்து வெளியேறி உள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி கொழுந்து விட்டு எரிந்துள்ள தீயை அணைத்தனர்.
நள்ளிரவில் சொகுசு கார் தீப்பிடித்ததால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது தீயே அணைக்க பட்ட போதிலும் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.
கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்