• முகப்பு
  • தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்?

தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவருக்கு சொந்தமான அம்பாசிடர் காரை பழுது நீக்குவதற்காக விழுப்புரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் செட்டுக்கு கொண்டு செல்லும் பொழுது , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் , காரில் டீசல் கசிவு ஏற்பட்டதன் காரணமாக திடீரென தீ பற்றி எரிந்தது. இதனைத்தொடர்ந்து கார் ஓட்டுனர் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி.சுரேஷ் #carfired #perambalur #firedepartment #உளுந்தூர்பேட்டை #todaystamilnews #news #districtnews #tamilnadu #tginews #thegreatindianews

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended