பள்ளியை சுத்தம் செய்த சிறுவர்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

செம்பட்டியருகே ஆபத்தானமுறையில் அரசு பள்ளிமாடியை சுத்தம்செய்த குழந்தை மாணவர்கள். செம்பட்டியருகே பச்சமலையான் கோட்டையில் ஊராட்சிஒன்றிய தொடக்கப் பள்ளி பள்ளியின் மாடியில் இலைகள்தேங்கி, மழைநீர் வெளியேறாமல் இருந்ததாக கூறப் படுகிறது. இதனை அடுத்து மாடியை சுத்தம்செய்யும் பணியில் பள்ளிமாணவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். மாடியில் ஏறி அங்குதேங்கி கிடந்த இலைகளை மாணவர்கள்சுத்தம் செய்தனர். அப்போது சிலமாணவர்கள், ஆபத்தான முறையில்மாடியில் அங்கும் இங்குமாக தாவி ஒடினர். சிலர், கைப்பிடிசுவரில் ஏறி விளையாடினர். உடன் ஆசிரியர்கள் யாரையும் காணவில்லை. இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்குபணிபுரியும் ஆசிரியர்களுக்குகண்டனம் தெரிவித்தனர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended