சிறுவனை கடத்தி ஒரு கோடி பணம் கேட்டு மிரட்டல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அக்கராபாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மகன் 4 வயது தருண் என்பவரை கடந்த 7ம் தேதி நல்லிரவு காணாமல் போய்விட்டதாக சிறுவனின் தாய் கௌரி கச்சராயபாளையம் போலீசில் புகார் புகார் செய்திருந்தார் .
அதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டன காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி தலைமையில் 3 தனி படி அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் இன்று சின்னசேலம் அருகில் உள்ள பங்காரம் கிராமத்தில் குற்றவாளிகள் நடமாட்ட இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிறுவன் கடத்தலில் ஈடுபட்ட கச்சிராயபாளையம் ஊத்தோடை பகுதியைச் சேர்ந்த சந்திரசோழன் அதே பகுதி சேர்ந்த ஈஸ்டர் ஜாய் ஆகிய இருவரை தனிப்படை போலீஸ் கைது செய்தனர் .
கடத்தல் கும்பல்யிடம் இருந்து சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர் பின்னர் அந்த சிறுவனை பெற்றருடன் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தப்பி ஓடிய ரகுபதி என்பவரை போலீஸ் தேடி வருகிறது சிறுவனை கடத்திய கும்பல் பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது சிறுவனை மீட்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை போலீசருக்கு எஸ் பி பாராட்டு.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்