• முகப்பு
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்ட??

ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்ட??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஸ்ரீபெரும்புதூர் : இறந்த பெண்ணின் காதலனையும், விபச்சார பெண் ஏஜென்டையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் நேற்று இரவு இருபத்தி மூன்று வயதுடைய இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளம்பெண்ணின் உடல் அருகே கைப்பற்றப்பட்ட மணி பர்ஸ்ஸில் கிடைத்த தடயங்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் மர்மமான முறையில் இறந்து போனவர் பிரியா என்ற இளம்பெண் என்பதும் அவர் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பாலியல் தொழில் செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது. சிப்காட் தொழிற்பேட்டையான வல்லம் வடகால் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் நேற்று இரவு பிரியாவும் , காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த அந்தப்பெண்ணின் காதலன் வெங்கடேசன் (வயது 25) என்பவரும் சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளார்கள். பின்னர், அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்த அப்பகுதி வழியே சென்ற மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சடலத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வருவதற்கு முன்பே காதலன் வெங்கடேசன் தலைமறைவானார். அந்தப் பெண்ணின் சடலம் அருகே கிடைத்த தடயத்தை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்ற விபச்சார பெண் ஏஜன்டும், காதலன் வெங்கடேசனும் காவல்துறையினரிடம் சிக்கினர். பிரியா உள்ளிட்ட பல பெண்களை வைத்து ஜோதி என்ற விபச்சார ஏஜென்ட், பாலியல் தொழில் செய்து வந்துள்ளதாகவும், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அபிராமி ஓட்டல் மற்றும் கே எம் லாட்ஜ் ஆகியவற்றில் தங்கியுள்ள கஸ்டமர்களுக்கு பிரியா உள்ளிட்ட பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு அனுப்பி பணம் சம்பாதித்ததாகவும் ஜோதி கூறியுள்ளார். பிரியா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தன் கணவனைப் விட்டு பிரிந்து காதலன் வெங்கடேசனுடன் சேர்ந்து கொண்டு இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் , ப்ரியா மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பிரியா கஞ்சா போதை தலைக்கேறி இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா, என பலகோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்து வருகின்றார்கள். மேலும் ஜோதி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் ஸ்ரீபெரும்புதூர்,இன்றைய முக்கிய செய்திகள் ஸ்ரீபெரும்புதூர்,இன்றைய செய்திகள் ஸ்ரீபெரும்புதூர்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Sriperambadur news,Sriperambadur

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended