• முகப்பு
  • குற்றம்
  • நாகை அருகே ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில் பாஜக நிர்வாகியை கைது செய்ததை, கண்டித்து, உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை சாலையில் வைத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

நாகை அருகே ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில் பாஜக நிர்வாகியை கைது செய்ததை, கண்டித்து, உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை சாலையில் வைத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

செ.சீனிவாசன்

UPDATED: May 27, 2023, 8:23:53 AM

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் ஜென்னட் பிர்தௌஸ் இரவு பணியில் இருந்த போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர்ராம் என்பவர் கடந்த (24.5.2023) அன்று இரவு 11.30 மணியளவில் அவரது உறவினரான சுப்பிரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக அழைத்து வந்துள்ளார்.

அப்போது அவரை மேல் சிகிச்சைக்காக நாகை அனுப்பி வைக்க வேண்டும் என கூறிய மருத்துவரிடம் பாஜக நிர்வாகி மறுப்பு தெரிவித்து ,அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும், மருத்துவர்க்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா என்று கேள்வி எழுப்பி அங்கு தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து தகராறு செய்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகியது.

இதனிடையே ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர்ராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர்ராம் உறவினரான சுப்ரமணியன் இன்று காலை உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது இறுதி ஊர்வலம் 26.5.2023 மாலை திருப்பூண்டியில் நடைபெற்றது.

இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜகவினர் சடலத்தை சாலையில் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரோ அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றும் மருத்துவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மருத்துவ குழு மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

நாகை அருகே ஹிஜாபை அகற்ற சொன்ன விவகாரத்தில் பாஜகவினர் திடீரென இறந்தவரின் சடலத்தை சாலை வைத்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended