அதிமுக வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.
குமரவேல்
UPDATED: May 15, 2023, 10:42:50 AM
கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் திமுக,த.வா.க,உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி தொகுதி அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் திமுக, த.வா.க,உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் அந்தந்தக் கட்சிகளிலிருந்து விலகி, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையை ஏற்று பண்ருட்டி நகரமன்ற முன்னாள் தலைவர் P.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார் முன்னாள் நகரமன்ற தலைவர் P.பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் கந்தம்பாளையம் பெருமாள், டிபிடிசி நடராஜன், ஜெய்சங்கர், கருணாகரன், பிரகாஷ், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.