எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளர் வாழ்க என அதிமுக நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சேலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் நோக்கி சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே.பழனிச்சாமிக்கு தியாகதுருகம் பேருந்து நிலைய பகுதியில் அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிரபு தலைமையில் அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் .
இந்த நிகழ்வில் தியாகதுருகம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என தொண்டர்கள் சிலர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்