முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் 32 வது நினைவு நாள்
மகேஷ் குமார்
UPDATED: May 21, 2023, 2:38:57 PM
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் 32 வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் எம். சம்பத் தலைமையில் கும்முடிப்பூண்டி பஸ்நிலையம் எதிரில் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் எ.எஸ்.சிவா ரெட்டி, மாவட்ட ஆர் டி ஐ அணி மாவட்ட தலைவர் டி என் பாபு முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி மற்றும் ராஜிவ்காந்தியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.