Author: THE GREAT INDIA NEWS

Category: political

ஸ்ரீமுஷ்ணத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நூறாண்டு பேசும் ஓராண்டு பொற்கால ஆட்சி அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட மசூதி சாலையில் , திமுக ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் தலைமையில், பழைய காவி நிறத்தில் பட்டாசு வெடித்து , சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தோடு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் . அதோடு தமிழக முதல்வர் பெண்களுக்கு இலவச பஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத் திட்டங்கள் என செய்துவரும் நிலையில், மற்ற ஆட்சி வந்தால் இது போன்ற பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ள முடியாத முதல்வர்கள் இருக்கும் நிலையில், நூறாண்டு சாதனை ஓராண்டிலேயே செய்யும் ஆட்சி என்று கூறினார் . இதில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் , தங்க கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் செல்வகுமார், இளைஞரணி வீரவேல் பூவராக மூர்த்தி மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

Tags:

#இன்றையசெய்திகள்ஸ்ரீமுஷ்ணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenews #cudaloorelatestnews #cudalooretodaynews
Comments & Conversations - 0