திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் 13 ஆவது ஆண்டு பணியேற்பு விழா.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் 13 ஆவது ஆண்டு பணியேற்பு விழா நிகழ்ச்சி மங்கை மஹாலில் நடைப்பெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட ஆளுநர் கடலூர் பிறையோன் அவர்களும் உதவி ஆளுநர் தமிழ் பால் சிவகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வரவேற்புரை.
2021 22 ஆம் ஆண்டின் தலைவர் காளிதாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று அவர்கள் செய்த சேவைகளை அனைவரிடமும் எடுத்துரைத்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கூறினார் அதனைத் தொடர்ந்து 2021 22 ஆம் ஆண்டின் செய்த சேவைகளை பட்டியலிட்டு சென்ற ஆண்டின் செயலாளர் பாலமுருகன் வாசித்தார்.
அடுத்த நிகழ்வாக தலைவர் தான் செய்ய இருக்கும் திட்டங்களை பற்றி விவரித்து பேசினார் மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவகுமார் அவர்கள் 8 புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள் சாசன தலைவர் கணேசன் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி வாழ்த்துரை விளங்கினார்.
சேவை திட்டங்களாக மூன்று சக்கர மிதிவண்டி ஒரு மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டது எட்டு மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன இறுதியாக நன்றியுரை செயலாளர் ராஜதுரை அவர்கள் கூறினார்.
இவ்விழாவினை பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைவர் ரமேஷ் செயலர் ராஜதுரை பொருளாளர் அகிலன் மற்றும் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்