TET தேர்விலிருந்து விலக்கா? யாருக்கு?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

RTE Act அடிப்படையில் மத்தியமாநில பள்ளிகளில் பணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் கட்டாயம் TET தேர்ச்சிபெற்று இருக்க வேண்டும் என்றநிபந்தனை கடந்த 23 /8 / 2010 முதல் அமலாக்கம் செய்யப் பட்டது. தமிழகத்தில் தாமதமாக அரசாணை எண் 181 மூலம் நடைமுறைப்படுத்தப் பட்டது.  இதில் ஆசிரியர்கள் பணிநிரப்புதல் தொடர்பாகவும், நிரந்தர  பணியிடங்களில் பணிநியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற பள்ளிக் கல்வி இயக்கக செயல் முறைகள் 16 / 11 / 2012 அன்று தான் வெளிவந்தது என்பதாலும், இந்த தேதிக்கு முந்தைய கால கட்டத்தில் பணி நியமனம் செய்யப் பட்ட ஆசிரியர்கள் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக, பல்வேறுவழிகளில் தமிழக அரசிடமிருந்து TET லிருந்து விலக்கு வேண்டி கோரிக்கைகள் வைத்துவந்த நிலையில் கடந்த ஆட்சியாளர்கள் மறுப்புதெரிவித்து வந்தனர். விலக்கு தருவதில் பல்வேறு பாகு பாடுகளும், குழப்பங்களும் இருந்து வந்தன. அதைதீர்க்கும் விதமாகவும், பாதிக்கப் பட்ட ஆசிரியர்களைப் பாதுகாக்கும் விதமாகவும், பத்தாண்டுகளுக்கு மேல் கல்விகற்றல் கற்பித்தலில் உள்ளதையும் கருத்தில்கொண்டு தற்போதைய தமிழகஅரசு விரைவில் அரசாணை வெளியிடும் எனவும் பள்ளிக் கல்வி துறை ஆணையகம் வழியாக நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  நிரந்தரமாக பணியிடத்தில் பணிநியமனம் பெற்று இன்றுவரை TET லிருந்து விலக்குதொடர்பான தெளிவான அரசாணை இல்லாமல் தமிழக அரசிடமிருந்து ஒரு நல்லவிடியல் வரும் என காத்துக்கொண்டு இருப்பவர்கள்.... 1) 23 / 8 / 2010 க்கு பிறகு ( TRB / வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் ) நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப் பட்ட இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  2)  23 / 8 / 2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசுஉதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தரபணியிடங்களில் பணி நியமனம் செய்யப் பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.  3) ஆசிரியர் அல்லாத அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23 / 08 / 2010 க்குப்பிறகு பதவிஉயர்வு மூலமாக இடைநிலை ( TET PAPER 1 ) / பட்டதாரி ( TET PAPER 2 ) ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள்.  4) சத்துணவுத்துறையில் அரசு பணியிடங்களில் பணிநியமனம் பெற்று, 23 / 08 / 2010 க்குப்பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள்.  5) 23 / 8 / 2010 க்குபிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தரபணியிடங்களில் பணி நியமனம் செய்யப் பட்ட இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு சிலர் தற்போது நீதி மன்ற வழி காட்டல் அடிப்படையில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களாக / தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்து வருபவர்கள்.  தற்போதைக்கு TET விலக்கு தொடர்பான பெரும்பாலான வழக்குகள்நிறைவுற்று இருப்பதால், இந்த நிரந்தரமாக பணியிடத்தில் சேர்ந்த ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும்பொறுப்பும் தமிழகஅரசிற்கு உண்டு. மேலும், பெரும்பாலான ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவசாலிகள் என்பதாலும், ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பதாலும், மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர்கலைஞர் அவர்களால் மொழியப் பட்ட அரசாணைகளின்படி பணியில்சேர்ந்தவர்கள் என்பதாலும், ஏற்கனவே ஊதியம்பெற்று வருவதால் அரசிற்கு புதிய செலவினங்கள் ஏதுமில்லைஎன்பதாலும், TET க்கு நிகரான புத்தாக்கப்பயிற்சி ஒன்றைத் தந்து விரைவில் TET பாதிப்பிலிருந்து விடுபடவழிவகை செய்யப்படும் எனவும் கல்வித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended