படப்பை அருகே பயங்கர வாகன விபத்து. CCTV
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரகடத்திலிருந்து படப்பை மார்க்கமாக சிமெண்ட் கலவை எந்திரம் பொருத்தப்பட்ட கனரக வாகனம் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.
வேகமாக சென்று கொண்டிருந்த கனரக வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார்கள் மீது படு பயங்கரமாக மோதியது.
இந்த வாகன விபத்தில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.
இதன் காரணமாக காரில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் ஓட்டுனர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
அதேபோல மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தவர்களில் குழந்தை உட்பட இருவர் பலி. ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.